கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Southwest monsoon is likely to start early in Kerala
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவுக்கு அடுத்த ஐந்து நாட்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டுதோறும் கேரளாவில் அதிக மழைப் பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Southwest monsoon is likely to start early in Kerala