மழை மோகம் மீண்டும்! இன்று இரவு 7 வரை 29 மாவட்டங்களில் சாரல் முதல் கனமழை வரை வாய்ப்பு...!
Rain mania is back Chance of light to heavy rain in 29 districts till 7 pm tonight
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதேசமயம், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்துக்குள் முழுமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.
இதன் தாக்கத்தில், வரும் 21ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 48 மணி நேரத்துக்குள் வலுவாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை துறை அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இன்று இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்கள்,"சென்னை,கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி,திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல்,கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு,தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. மேலும், இடி, மின்னலுடன் கூடிய திடீர் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மக்களும் விவசாயிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Rain mania is back Chance of light to heavy rain in 29 districts till 7 pm tonight