அடுத்த 48 மணி நேரத்தில் இந்த மாவட்டம் எல்லாம் வெள்ளக்காடு தான்.!
rain in tamilnadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, "வெப்பச்சலனம் மற்றும் காட்சி அடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் மற்றும் திருவிடைமருதூரில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது. கும்பகோணத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது. அரூரில் 11 சென்டிமீட்டர் விருத்தாச்சலம், ஆரணி, முசிறி உள்ளிட்ட இடங்களில் ஆறு நிமிட மழை பதிவாகி இருக்கின்றது.