பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கே நகர்ந்து, புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் இந்தியாவின் மேல் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, கொமாரின் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், நாவிகர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்ம் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pamban thoothukudi Port cyclone Southwest Monsoon IMD


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->