தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் அறிவிப்பு .!!
nov 26 red alert in tamilnadu and puducherry
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வார இறுதியில் மழையின் தாக்கம் குறைந்து நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால், பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும், தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்.
English Summary
nov 26 red alert in tamilnadu and puducherry