புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 60 கி.மீ வேகத்தில் வீசப்போகும் சூறாவளி காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை காலத்தில் வட திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் ஒருசேர வரும்போது பெரும்பாலான மழை கொட்டி தீர்த்தது. தற்போது வட திசை காற்று அதிக அளவில் இருந்தாலும், கிழக்கு திசையிலிருந்து வீச வேண்டிய காற்று என்பது கணிசமான அளவில் உள்ளது. இதன் காரணமாக மறையும் தாக்கம் குறைந்துள்ளது. 

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே பூமத்தியரேகை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் எந்த வித மழைக்கான முன்னறிவிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை இல்லை என்றாலும், இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no rain for tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->