தமிழகத்தில் கனமழைக்கு "வாய்ப்பில்லை ராஜா".!! வானிலை மையம் கொடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தென் தமிழகத்தை புரட்டி போட்ட கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் (டிச. 2) வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்குவடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (டிச.31) முதல் ஜன.5 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப் பகுதி காரணமாக குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல்45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண் டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No chance of heavy rain in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->