நாளை மறுநாள் உருவாகப்போகும் புயல்.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு.!!
new cyclone from bay of bangal
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் இயல்பை விட 83 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மழை சற்று குறைந்து வருகிறது. இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரை நீடிப்பதன் காரணமாக, அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது.
இதனிடையே தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகி உள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெறக்கூடும்.
அதன் பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுபெற கூடும். இது வரும் 4ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடல் பகுதியை நெருங்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
English Summary
new cyclone from bay of bangal