வட தமிழக கடலோர பகுதிகளுக்கு 'ரெட் அலார்ட்' - வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Meteorological Centre alounce North Tamil Nadu coastal area red alart
தமிழகத்தில், கடந்த மாதம் 29 ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில், மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்த நிலையில், தற்போது, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உரு மாறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் மற்றும் புதுவை கடலோரம் வருக்கிறது. அதன் பின்னர் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 13-ம் தேதி தமிழ்நாட்டில் கரையை கடக்கும் போது அதிக மழையை தரும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை
English Summary
Meteorological Centre alounce North Tamil Nadu coastal area red alart