கொளுத்தும் வெயில்: கேரளத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal




கேரள மாநிலத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின் தேவை அதிகமான நிலையில் மின் பகிர்வில் கட்டுப்பாடுகளை கேரள மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில் வெப்பத்தின் தாக்கம் நாளை வரை பல மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பாலக்காடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ், ஆலப்புழா திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதற்கிடையே பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கோடை மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்தது. மேலும் எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் வருகின்ற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala 12 districts Yellow alert 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->