தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு லேசான மழை.!!
mar 5 weather report in tamilnadu
தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
8.3.2021 தென் தமிழக மாவட்டங்கள் ஒரு சில லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் தெளிவாக காணப்படும். அதிக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தப்பட்ட வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
mar 5 weather report in tamilnadu