தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்... வானிலை ஆய்வு மையம்.!
mar 2 weather report in tamilnadu
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2.3.2021 முதல் 5.3.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வங்கக் கடலில் கடல் மட்டத்தில் நிலவும் எதிர் சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் கிழக்கு திசையிலிருந்து குறைந்த வேகத்துடன் கூடிய ஈரக் காற்று வீசுவதால் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
mar 2 weather report in tamilnadu