சென்னையில் இரவோடு இரவாக புரட்டியெடுத்த கனமழை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

சென்னையில் வானம் மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை காலை அதிகாலை 4 மணி வரை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் குளிர்ச்சியான சூழலை நிலவுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் புகுந்து உள்ளதால் வெளியேற்றம் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 19 rain in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->