தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

மேலும் ஒரு சில இடங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் இருக்கக் கூடும். ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heat increase in tamilnadu Meteorological Center info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->