தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு மிதமான மழை.!!
feb 23 rain in tamilnadu
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.
இந்நிலையில், வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் வட தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24.2.2020 அன்று முதல் 26.2.2021 அன்று வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.