காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒன்றாம் எண் புயல் கூண்டு! - Seithipunal
Seithipunal


தெற்கு அந்தமானில் உள்ள வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாழ்வு பகுதி மத்திய வங்க கடலில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

 இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் சிட்ரங் என்ற பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவி வரும் காற்றழுத்து தாழ்வு பகுதியானது இன்று காலை காற்றழுத்து தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வரும் 24ம் தேதி காலை மத்திய வங்க கடலில் புயலாக வலுப்பெறும்.

மேலும் வரும் 25ஆம் தேதி டிக்கோனா தீவு மற்றும் சாண்ட்விட் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தொலை தூர புயல் சின்னம் உருவாகியதை எச்சரிக்கும் வகையில் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று மாலை ஏற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore harbor hoisted number one cage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->