#BREAKING || தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று அரியலூர், கடலூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணிநேரத்திற்கு லேசான மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 district orange rain alert in Tamilnadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->