திருச்சி அருகே பரபரப்பு.! ஜாமீனில் வந்த வாலிபரை ஓட ஓட விரட்டி அறிவாளால் வெட்டிக்கொலை.!
youth who came on bail was murder in trichy
திருச்சி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஜாமினில் வெளியே வந்த வாலிபரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் கிளிக்கூடு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பிரகாஷ் (23). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த நல்லேந்திரன் என்பவரது மகன் அறிவழகன் (30). இவர்கள் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் மரியாதை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் ஆட்களுடன்சேர்ந்து அறிவழகனை கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் பிரகாஷ் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் வெளியே வந்தார்.
இதையடுத்து அறிவழகனின் பெரியப்பா மகனான அசோக் (35) ஜாமினில் வெளியே வந்த பிரகாஷை பழிவாங்க திட்டமிட்டு, நேற்று முன்தின இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பிரகாஷை அசோக் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து அறிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.
இதனால் பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவரை விரட்டிச் சென்று அசோக் உள்ளிட்ட மூன்று பேர் சரமாரியாக அறிவாளர்கள் வெட்டி உள்ளனர். இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக பிரகாஷை வெட்டி கொலை செய்த அசோக் உள்ளிட்ட மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
youth who came on bail was murder in trichy