கிருஷ்ணகிரி: அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு
Youth killed in government bus collision
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டபள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சஞ்சய் (22). இவர் நேற்று மிட்டப்பள்ளி அருகே சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென சஞ்சய் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சயை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சஞ்சய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed in government bus collision