பெயிண்டிங் வேலை பார்த்தபோது பாய்ந்த மின்சாரம்.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் பெயிண்டிங் வேலை பார்த்தபோதும் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவி. வெளிநாட்டில் வேலை பார்த்த இவருடைய மகன் கார்த்திக்(32) திருமணம் செய்வதற்காக 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்த கார்த்திக், கழுவதோண்டி கரைமேடு சாலையில் உள்ள கட்டிடத்தில் பெயிண்டிங் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்தபோது எதிர்பாராத விதமாக அருகிலுள்ள மின்சார ஒயரில் கார்த்திக்கின் தலை உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed by electrocution in Ariyalur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->