பேனர் வைக்க சென்ற இடத்தில் இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பேனர் வைக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. சம்பவதன்று, அம்பேத்கார் பிறந்தநாளான இன்று பேனர் வைப்பதற்காக பக்தர் கடை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். 20 அடி நீளமுள்ள பேனர் வைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பேனர் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில், பேனர் கட்டி கொண்டிருந்த நால்வர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில், சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Death In Thiruthuraipoondi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->