விடைபெறுகிறேன் நன்றி... வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்து விட்டு இளைஞர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் இவருக்கு பால்பாண்டி (29) என்ற மகனும் இருக்கிறார். பால்பாண்டி அந்த பகுதியில் சாலையோரம் துரித உணவுக் கடை நடத்தி வருகிறார்.

பால்பாண்டி மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது சம்பவத்தன்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் விடைபெறுகிறேன் அனைவருக்கும் நன்றி என அறிவித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைக் கண்ட உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதால் இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அடைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth commit suicide In vathalakundu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->