பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் பிணம்.! கொலையா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே எசனை தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ராணி. இவர்களது ஒரே மகன் கமலக்கண்ணன்(25) நேற்று முன்தினம் தாய் ராணியிடம் வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் கமலக்கண்ணன் பிணமாக மிதந்துள்ளார்.

இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து கமலக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், கமலக்கண்ணனை யாராவது கொன்று கிணற்றில் வீசினார்களா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth body found floating in well near Perambalur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->