#கோயம்புத்தூர் || 11ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது..! - Seithipunal
Seithipunal


11ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்துர் மாவட்டம், தடாகத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, அந்த மாணவிக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே மகளை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி ஆனந்திடம் தெரிவித்துள்ளார். அப்போது, அவர் திருமண ஆசைக்காட்டி மாணவியை கடத்தி சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியை காணவில்லை என கூறி அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்  ஆனந்தையும் மாணவியையும் மீட்டனர்.

மாணவியிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலியல்தொல்லை அளித்து வந்தது தெரிய வந்தது. ஆனந்தை போக்சோவில் கைது செய்த காவக்துறையினர் நீதிம்னறத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested in Coimbatore


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->