குடிக்க பணம் கொடுப்பதில் தகராறு... நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் மது குடிக்க பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அஜித்(25), சரண் ராம்(28). நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னை மணலி புதூர் நகர் அருகே உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மது அருந்துவதற்காக நேற்று மணலி புது நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது மது வாங்குவதற்கு முதலில் அஜித் பணம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து மது அருந்துவதற்கு கொடுத்த பணத்தில் பாதியை தருமாறு சரண்ராமிடம் கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சரண் ராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த அஜித் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நண்பனை கத்தியால் குத்திய சரண்ராமை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for stabbed friend in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->