சிவகங்கை : தாயின் நடத்தையில் சந்தேகம் - ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை : தாயின் நடத்தையில் சந்தேகம் - ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே பூவந்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு விக்னேஷ், விஷ்ணுபிரபு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூர்த்த மகன் விக்னேஷ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அதனால், விக்னேஷ் பிரபு மட்டும் தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அருள்ஜோதி உள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது தனது தந்தை வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இதற்கிடையே விஷ்ணு பிரபுவுக்கு தனது தாய் அருள்ஜோதியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் படி இருவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு எழுந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு பிரபு தனது தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி செநின்றுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து அருள்ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த விஷ்ணு பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனே தாயக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for kill mother in sivakangai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->