திண்டுக்கல் அருகே பரபரப்பு சம்பவம்.! தோட்டத்து வீட்டில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் வாலிபர் கொடூரமாக அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விவசாயி ஜோதி (27). இவருக்கு சொந்தமாக தோட்டத்து வீடு ஒன்று இதே பகுதியில் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஜோதி இந்த வீட்டில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்தை வீட்டுக்கு சென்ற ஜோதி இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது ஜோதியின் கழுத்தில் அறிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youngman hacked to death in garden house in Dindigul near


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->