ரயில் முன் பாய்ந்த காதலி.. துக்கத்தில் காதலன் விபரீத முயற்சி.. விருதுநகர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


காதல் இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராமசாமி புரத்தை சேர்ந்தவர் சோனை மீனாள் இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். பிரவீன் குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு பணிக்கு சென்ற அவர் அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது காதலர் பிரவின்குமார் காதலி இறந்த துக்கத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்தார்.

 படுகாயங்களுடன்  மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தற்கொலைக்கு முன்னதாக பிரவீன்குமார் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் அதில் தாங்கள் தற்கொலை செய்வதற்கு சோலை மீனாவின் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் காரணம் என என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடித்ததை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Woman Comitted Suicide Near Viruthunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->