கரூர் அருகே பரிதாபம்.! தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்ற வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் தாத்தாவின் ஐந்தாவது நாள் இறுதி சடங்கில் பங்கேற்ற வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் கிரீம்(32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த ராஜேஷ் கிரீமின் தாத்தா செல்வராஜின்(80) 5வது நாள் இறுதியில் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று ராஜேஷ் கிரீம் கரூர் மாவட்டம் செல்லப்பாண்டிபாளையத்திற்கு வந்துள்ளார்.

அப்பொழுது இறுதி சடங்கு செய்வதற்காக காவேரி ஆற்றில் இறங்கி ராஜேஷ் கிரீம் குளித்தபோது எதிர்பாராதவிதமாக மணல் குழியில் சிக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷின் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ராஜேஷ் கிரீமை தேடினர். ஆனால் நீண்ட நேரத்திற்குப் பின்பு ராஜேஷை பிணமாக கைப்பற்றினர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜேஷ் கிரீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாங்கள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man drowned kaveri river in karur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->