கன்னியாகுமரி : இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கேரள வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கேரள வாலிபர் கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தொழிலாளியான இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்ற போது வாலிபர் இருவர் இவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார். 

அந்த வாலிபர் செந்தில்குமாரிடம் மணிகேட்பது போல் பேச்சுக் கொடுத்து பின்னர் தன் கட்டுப்பாட்டில் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், 500 ரூபாய் கொடுத்தால் அவர்களோடு உல்லாசம் அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கூறி அந்த வாலிபர் செந்தில்குமாரை அழைத்துள்ளார்.

இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி போலீஸார் செந்தில்குமார் குறிப்பிட்ட இடத்திற்குச் போய் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் இருந்தார்.

இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் அந்த பெண்ணை கன்னியாகுமரியில் வீடு எடுத்து தங்கவைத்து, ஏஜென்டாக செயல்பட்ட அந்த வாலிபரை கைது செய்தனர்.

அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கடைக்காவூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும், கார் ஓட்டுனரான அவர் குமரியில் வீடு எடுத்துத் தங்கி, இளம்பெண்களை தங்கவைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் செந்தில்குமாருடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man arrested for Prostitution business in kanniyakumari


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->