தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Yellow warning for Tamil Nadu Information from the weather observation center
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி ,நெல்லை ,தென்காசி, நீலகிரி, தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் முதல் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு அதிக வெப்ப இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.இதனால் மக்கள் கடும் சிரமப்பட்டனர். புதுவை, வேலூர்,சென்னை,திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி இருந்தது
இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதன்படி தமிழ்நாட்டில் வருகிற 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Yellow warning for Tamil Nadu Information from the weather observation center