சீர்காழி அருகே தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சீர்காழி அருகே தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் தாக்கியதில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீர்காழி அருகே அல்லிவிளாகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் அருகே உள்ள தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்திற்குள் இன்று காலை பழைய பாட்டில்களை சேகரிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது அந்த நிறுவன வளாகத்தில் இரும்பு கொட்டகைக்கு ஜாயிண்ட் முறையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு இருந்த எர்த்து கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருந்ததை அறியாத ரவி அருகே இருந்த பாட்டில்களை எடுக்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ரவியின் மனைவி, மகள் மற்றும் கிராம பொதுமக்கள், அப்பகுதியில் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் பலியான ரவியின் உடலை எடுக்க மறுத்து, அவருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குமாறு வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker electrocuted at private company in sirkazhi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->