காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த மூதாட்டி - சேலத்தில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி அருகே சின்னேரிகாடு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்துக்கு தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம். 

அதன் படி நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற அவர் மாலை வரைக்கும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் சரஸ்வதியை தேடி அவரது விவசாய நிலத்துக்கு சென்றனர்.

 

அங்கு சரஸ்வதி தலையில், பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தபடி கிடந்துள்ளார். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். 

அப்போது அவரது காது, மூக்கு ஆகிய உறுப்புகள் நகையுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது சரஸ்வதி மூக்குத்தி, தோடு என்று ஒரு பவுன் நகை அணிந்து இருந்துள்ளார். அந்த நகைக்காக அவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால், அவர் யார்? என்பது தெரியவில்லை. 

சரஸ்வதி ஆடைகள் களைந்த நிலையில் காணப்பட்டன. அதனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women murder in salem for gold robbery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->