3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலி - மதுரையில் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெமிலா. இவர் தனது 2 பேரக்குழந்தைகளுடன் மதுரைக்கு வந்தார். அங்கு அவர் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு, மதுரை யாகப்பா நகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பேரக்குழந்தைகளுடன் சென்றார்.

அங்கு சகோதரர்கள் குடும்பத்தினருடன் பேசி விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஆட்டோவில், தனது பேரக்குழந்தைகளுடன் ஏறினார். அப்போது ஜெமிலாவின் சகோதரர் வீட்டிற்கு அருகே இருந்த பழமையான 3 மாடி கட்டிடம் திடீரென ஜெமிலா அமர்ந்திருந்த ஆட்டோ மீது இடிந்து விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெமிலாவின் சகோதரர் கதறி அழுதார். 

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஜெமிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். பேரக்குழந்தைகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும், ஆட்டோ ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஜமீலாவின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 3 மாடி கட்டிடம் ஆட்டோ மீது விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died and two childrens injured for building collapse in madurai


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->