கருக்கலைப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் செய்த காரியம்.! துடிதுடித்து பறிபோன உயிர்.!
women death after went from hospital
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் காரணம் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும், மணப்பாறையை அடுத்த சடையாம்பட்டியை சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கின்றது.
சமீபத்தில்தான் ஜீவிதா கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், அவரது வயிற்றில் இருந்த குழந்தை முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்ததால் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜீவிதா தன்னுடைய தாய் வீட்டில் இரண்டு மாதங்களாக ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
அதன் பின்னர் நான்கு நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று ஜீவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜீவிதாவின் தாய் புகார் அளித்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
women death after went from hospital