அதிமுக பேனரால் படுகாயமடைந்த இளம்பெண் - திருவள்ளூர் அருகே பரபரப்பு.!
woman injured for admk bannar fell down in thiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக சாலையில் வைக்கப்படும் பேனர்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென அந்த பேனர்கள் சரிந்து, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கீர்த்தனா என்பவர் மீது விழுந்தது.
இதில் அவருக்கு லேசான காயமும், காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கீர்த்தனாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பேனர் விழுந்து பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman injured for admk bannar fell down in thiruvallur