உடல்நலம் சரியில்லாமல் இறந்த குழந்தை.. தாய் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கைக்குழந்தை கிடந்ததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருமணமாகி ஆஷா என்ற மனைவியும் கயல் என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. வினோத்குமார் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் கடந்த 17ஆம் தேதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், ஆஷாவின் கணவர் அவருக்கு சனிக்கிழமை அன்று தொலைபேசியில் அழைத்துள்ளார் நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை எடுக்காததால் பயந்துபோன அவர் வீட்டுக்காரரை தொடர்புகொண்டு விபரத்தை கூறி சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

அந்தப் பெண் வந்து பார்க்கும் பொழுது ஆஷாவின் குழந்தை இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கூறியுள்ளார். வினோத்குமார் உடனே காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide Near kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->