நாட்டை உலுக்கிய விவகாரம்: பேராசிரியை நிா்மலா தேவி வழக்கில் இன்று தீா்ப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 

கல்லூரி மாணவிகளை நிர்மலா தேவி கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களை தவறான பாதையில் வழிநடத்தும் விதமாக பேசியதாக பேராசிரியை மீது அரும்புக்கோட்டை போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். 

இது தொடர்பாக நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கு குறித்து அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Professor Nirmala Devi case today Judgment 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->