தென்காசி: பெண் மர்மமான முறையில் கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!
Woman beaten to death mysteriously in thenkasi
தென்காசி மாவட்டத்தில் பெண் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜன். இவர் கோவையில் தங்கியிருந்து வேலை செய்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் வழக்கம். இதனால் அவரது மனைவி தங்கம்(54) தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தங்கம் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சென்று பார்த்தபோது, தங்கம் தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் தங்கம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் உயிரிழந்த தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தங்கத்தை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள், என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Woman beaten to death mysteriously in thenkasi