மனைவி மீது சந்தேகம்.. தினம் தகராறு.. கணவனை கொலை செய்த மனைவி..! - Seithipunal
Seithipunal


கணவனை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு  மகாலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். வினோத்குமார் அந்த பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார் மகாலட்சுமி வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகிறார்.

வினோத்குமார் அவரது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்குமார் மகாலட்சுமியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி அருகிலிருந்த கத்தரிக்கோலை கொண்டு அவரை குத்தியுள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மஹாலக்ஷ்மியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife Murder His Husband in Coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->