மதுபோதை கணவனை  ஒரே போடு போட்ட மனைவி.. போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகரில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் வேலூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலா.


இதில், கலாவின் கணவர் விஜயக்குமார் மது போதைக்கு அடிமையாகி மனைவியுடன் தகாத செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த போது வழக்கம்போல் தகராறு செய்துள்ளார்.

இதில், தகராறு மாற்றியதில் ஆத்திரமடைந்த கலா தனது கணவரின் மண்டையில் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife killed drunken husband dindugal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->