காக்கி உடையில் பகல் கொள்ளை! மாணவியிடம் சில்மிஷம் செய்து ரூ.8000 பறித்த காவலர்...! - பெசன்ட் நகரில் அரங்கேறிய பயங்கரம்...!.
Daytime robbery Policeman robbed student 8000 after making fun him Horror unfolded Besant Nagar
சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில், கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த காவலர் ஜோசப், மாணவியிடம் ஒழுங்கு மீறிய முறையில் நடந்து கொண்டு, பாலியல் சீண்டலுக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு, மாணவியின் நண்பரை தகாத சொற்களால் அவமதித்து, அச்சுறுத்தும் விதமாக அடாவடி நடத்தை காட்டிய அவர், உடனடியாக பணம் வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
பணம் வழங்காத பட்சத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த மிரட்டலால் பதற்றமடைந்த மாணவி, அருகிலிருந்த ஏ.டி.எம் மையத்திற்குச் சென்று ரூ.8,000 தொகையை எடுத்து வந்து அந்த காவலரிடம் வழங்கியுள்ளார்.
பின்னர் தன்னம்பிக்கை திரட்டி, இந்த சம்பவம் குறித்து மாணவி சாஸ்திரி நகர் காவலர்களிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு, காவலர் ஜோசப்பை கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
English Summary
Daytime robbery Policeman robbed student 8000 after making fun him Horror unfolded Besant Nagar