மதுவுக்கு அடிமையான கணவன்., தினம் அடி உதை தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்...!! நிர்கதியான 3 குழந்தைகள்...!! - Seithipunal
Seithipunal


கணவனுடன் ஏற்பட்ட தகராற்றால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், செல்வபுரத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுப்பட்டுள்ளது. இதனால் திவ்யா மனமுடைந்து காணப்பட்டுள்ளார் .

 

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து திவ்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife commits suicide because husband is addicted to alcohol


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->