கள்ளக்காதலனுடன் ஜாலியாக கணவன், 2 குழந்தைகளை கொல்ல முயன்ற மனைவி கைது!
Wife arrested for attempting to kill husband and 2 children along with her lover
தனது கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருப்பதற்காக கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த கஜேந்திரா என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சைத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.33 வயதான சைத்ரா தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன.குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரின் உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சைத்ராவுக்கு ஷிவு என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசுவது,கணவனுக்கு தெரியாமல் ஜாலியாக இருத்துவந்துள்ளனர்.சைத்ராவுக்கு கள்ளக்காதல் இனிப்பாகி கள்ளக்காதல் மோகம் தலைகேறியதால் தனது குடும்பத்தினரை கொன்று ஜாலியாக இருக்க முடிவு செய்தார்.
இந்த உறவுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பார்கள் என்று அஞ் சிய சைத்ரா, அவர்களை விஷம் வைத்து கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்.சம்பவத்தன்று உணவு மற்றும் காபியில் நச்சு மாத்திரைகள் மற்றும் பிற பொருட்களைக் கலந்து கொடுத்ததால், குடும்பத்தினருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.இதையடுத்து கணவர் கஜேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பெலூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் சைத்ரா வேண்டுமென்றே உணவில் தூக்கமாத்திரை கலந்தது உறுதி செய்யப்பட்டது.உடடியாக சைத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கள்ளக்காதலன் ஷிவு தலைமறைவாக உள்ளார்.
English Summary
Wife arrested for attempting to kill husband and 2 children along with her lover