நான் செய்தது தவறு தான்..ஓடும் ரெயிலில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்பெண் மன்னிப்பு கேட்டார்! - Seithipunal
Seithipunal


நான் செய்தது தவறு தான். எனக்கே தெரியாமல் விளையாட்டு தனமாக செய்துவிட்டேன் என்று ஓடும் ரெயிலில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்பெண் மன்னிப்பு கேட்டார்.

நாகர்கோவில் மாநகர பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஆடிப்பாடி எடுத்த 'ரீல்ஸ்' வீடியோ ஓன்று  சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை  பார்த்த பலரும்  இளம்பெண் ஆபத்தை உணராமல் இப்படி செய்யலாமா என கடிந்து கொண்டு  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் செயலை பார்த்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நான் செய்தது தவறு தான். எனக்கே தெரியாமல் விளையாட்டு தனமாக செய்துவிட்டேன் என்று ஓடும் ரெயிலில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்பெண் மன்னிப்பு கேட்டார்.
. கைகூப்பி வணங்கியபடி அந்த இளம்பெண் வீடியோவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தேன். அதை நான் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் செய்தேன். அது இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வெளியே தலை காட்ட முடியவில்லை.

நான் செய்தது தவறு தான். எனக்கே தெரியாமல் விளையாட்டு தனமாக செய்துவிட்டேன். பிரச்சினை வந்த பிறகு வீடியோவை நீக்கிவிட்டேன்.  நான் தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்று யாரும் தயவு செய்து 'ரீல்ஸ்' செய்யாதீர்கள்.  கீழே விழுந்து மரணம் அல்லது கை, கால் போயிருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரெயிலில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண் நாகர்கோவில் மேல ராமன்புதூர் பகுதியை சேர்ந்த 30 வயது சகிலாபானு  என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What I did was wrongThe young woman who took a Reelsvideo on the moving train has asked for forgiveness


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!


செய்திகள்



Seithipunal
--> -->