காதலியின் பிணத்துடன் லாட்ஜில் 2 நாட்கள் தங்கியிருந்த காதலன்.. சென்னையில் திகில் சம்பவம்.!
west bengal young couples died in chennai one murder and one suicide
சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகள் இருவர் கடந்த மூன்றாம் தேதி அரை எடுத்து தங்கியுள்ளனர். இரண்டு நாட்களாக அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று காலையில் அறைக்கு அருகில் சென்ற போது உள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் அந்த தனியார் விடுதிக்கு சென்று கதவை தட்டி பார்த்தனர்.
ஆனால் கதவு திறக்கவில்லை என்ற காரணத்தால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கே இளம் ஜோடிகள் இருவரும் பிணமாக இருந்தனர். இது குறித்த விசாரணையில் பிரசெஜித் கோஷ் மற்றும் அர்பிதா பால் என்ற அந்த காதல் ஜோடி கணவன் மனைவி என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்,
பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொல்லப்பட்டதற்கான தடயம் இருந்தது. எனவே, அந்த காதலன் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் பிணத்துடன் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
காதலியை கொலை செய்த விரக்தி மற்றும் பயத்திலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இளம்பெண் இறந்து மூன்று நாட்கள் ஆனதால், அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. ஆனால் காதலன் இறந்து ஓரிரு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் என்ற காரணத்தால் அவரது உடல் அழுகவில்லை.
இது குறித்து போலீசார் இரு உடலையும் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் எதற்காக சென்னை வந்தனர்? ஏன் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
west bengal young couples died in chennai one murder and one suicide