மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு.!!
Water release increased in Mettur Dam
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நாள்தோறும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை உயர்த்த வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 12 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெறும் வினாடிக்கு 236 கன அடி மட்டுமே வருவதாலும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணை நீரின் அளவானது 84.43 அடியாகவும் 46.41 டிஎம்சியாகவும் இருந்தது.
English Summary
Water release increased in Mettur Dam