தமிழநாட்டிலேயே இருந்தவருக்கு கொரோனா! ஆயுதப்படை காவலர் மருத்துவமனையில்!
viruthunagar police admitted in mudurai with corona positive
விருதுநகர் ஆயுத படை காவலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் குழுவினர் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் ஒன்பது பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 9 பேரும் வெளியிடங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் முறையாக தமிழகத்திலேயே இருந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. விருதுநகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் கடந்த வாரம் பாதுகாப்பு பணிகளுக்காக கோவைக்கு சென்றபோது அவருக்கு காய்ச்சல் ஏற்படவே பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அவர் தற்போது சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மற்றும் கோவை இரண்டுமே கேரளாவை ஒட்டிய மாவட்டங்கள் என்பதால் கேரளாவிலிருந்து பரவியதா, இல்லை தமிழகத்திலே கொரோனா தொற்று உள்ளதா என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது.
English Summary
viruthunagar police admitted in mudurai with corona positive