திருநங்கையை காதலித்து கரம்பிடித்து விருதுநகர் வாலிபர்.. பெற்றோர்களின் சம்மதத்துடன் நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியப்பாட்டியை அடுத்துள்ள வலையன்குளம் கிராமத்தை சார்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது 21). கருப்பசாமி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே ஊரைச் சார்ந்த தினகரன் என்பவரது மகன் கருப்பசாமி (வயது 24). 

இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருநங்கையாக மாறி, தனது பெயரினை கரீனா (வயது 21) என்று மாற்றிக்கொண்டு இருந்து வந்தார். இந்நிலையில், ஓட்டுநராக பணியாற்றி வரும் கருப்பசாமியும், கருப்பசாமியாக இருந்து கரீனாவாக மாறிய திருநங்கையும் உறவினர்களாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததன் எதிரொலியாக, இருவரும் நாளடைவில் காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கரீனாவை திருமணம் செய்யப்போவதாக கருப்பசாமி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

இந்த முடிவிற்கு அவரது பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னாளில் மகனின் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கருப்பசாமி கரீனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Youngster Married Transgender with Lots of Love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->