இராஜபாளையம் ஸ்ரீ ஜெய் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் இயற்கையை எய்தினார்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் 5 திரையரங்குகள் இருந்த நிலையில், இவற்றில் லட்சுமி என்ற சந்தை திரையரங்கம் நிர்வாகத்தால் கைவிடப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. சாந்தி திரையரங்கம் எப்போதாவது இயங்கும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. 

இதனையடுத்து, ஊரின் பிரதான திரையரங்கமாக ஸ்ரீ ஜெய் ஆனந்த் திரையரங்கம், சித்ரா திரையரங்கம், மீனாட்சி திரையரங்கம் ஆகியவை மாறியுள்ளது. புதிய படங்கள் மற்றும் உச்ச நட்சத்திரங்களின் பட வெளியீடு என்றால் ஜெய் ஆனந்த் திரையரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். 

இராஜபாளையம் நகருக்கே பெருமை சேர்த்த ஸ்ரீ ஜெய் ஆனந்த் திரையரங்கத்தின் உரிமையாளர் பி.ஏ.பி ராஜு. இவர் தற்போது வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று இயற்கையை எய்தினார். இவரது மறைவு இராஜபாளையம் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virudhunagar Rajapalayam Sri Jai Anand Theater Founder P A B Raju Passed Away 19 May 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->